• slider1
  • slider2
சொந்த நிலத்தில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு வசந்த இல்லம்...

கூட்டுப் பண்ணை விதிமுறைகள்

  • கூட்டுறவு அடிப்படையில் நலம் விவசாயம் செய்யப்படும்.
  • நிலத்தில் அதிநவீன முறையில், அனைத்து வகையான இயற்கை விவசாயமும் செய்யப்படும்.
  • முதலீட்டின் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாய் என்ற வகையில் நிலம் எழுதப்படும்.
  • ஒருவருக்கு / ஒருவர் பெயரில் ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்படும். ஐந்து ஏக்கர் ஒரு தொகுபு (யூனிட்) என கணக்கிடப்படும்.
  • அவரவர் பெயரில் இருக்கும் நிலத்தில் எப்படிப்பட்ட மாறுதல்களை செய்யவும் உபயோகப்படுத்திக் கொள்ளவும், “கூட்டுப்பண்ணை” நிர்வாகிகளுக்கு உரிமையுண்டு.
  • நிலத்தில் வீடு கட்டவும், போர் போடவும், கிணறு தோண்டவும், மின்சார இணைப்பு பெறவும், வேலி போடவும், வேலையாட்கள் விடுதி, சேமிப்புக் கிடங்கு போன்ற கூட்டுப்பண்ணைக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்துகொள்ளவும், தேவைக்கேற்ப இன்னும் பலவித வகைகளில், கூட்டுப் பண்ணையின் பங்குதாரர்களுக்கு பயன்படும் வகையில், உபயோகப்படுத்திக் கொள்ள கூட்டுப் பண்ணை பங்குதாரர்கள் அனைவருக்கும் உரிமையுண்டு.
  • கூட்டுப் பண்ணையை நிர்மாணித்தவர்கள்

 

கு.புகழேந்தி
வயது - 55
த.பெ. அமரர். ந. குமாரசாமி
178, 11வது மெயின் 5வது கிராஸ்
சரஸ்வதிபுரம், மைசூர் – 570 009
கர்நாடகா

R.P. சுப்பிரமணியன்
வயது - 50
த/பெ.அமரர். P.R. பெருமாள்
609/2, வீணே சேஷண்ணா தெரு
8வது கிராஸ், K.R. மொஹல்லா மைசூர் - 570 024,
கர்நாடகா

சி. நல்லக்கவுண்டர்
(தூரன் நம்பி)
வயது – 55
த.பெ.சின்னன்ன் கவுண்டர்,
18, திரு.வி.க. நகர்,
கல்லூரிச்சாலை,
திருப்பூர் / 461 602.
கோவை மாவட்டம்

J. நடேசன்
வயது – 55
த.பெ. ஐம்புலிங்க கவுண்டர்
மாரிமுத்தான் காடு,
சங்கதிரி, சேலம் மாவட்டம்


எம்.பி. நிர்மல் வயது - 65. நிறுவனர், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், சென்னை


ஆகியோர் நிர்வாகக்குழுவாக நிரந்தரமாக செயல்படுவர்,

இவர்களில் பணிபுரிபவர்களுக்கு மாதச் சம்பளம் உண்டு.


  • கூட்டுப் பண்ணையின் முழு நிர்வாகத்தையும், செயல்முறைகளையும் இவர்களே நடைமுறைப்படுத்துவர்.
  • நிர்வாக குழுவிற்கு ஒரு “ஆலோசனைக்குழு” நிறுவப்படும். இதில் பங்குதாரர்கள் மட்டுமின்றி வேறு வல்லுநர்களும் நியமிக்கப்படுவர்.
  • “ஆலோசனைக்குழுவின்” கூட்டம் தேவையேற்படும்போது கூட்டப்படும், இதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு, அழைப்பின் பேரில் வரும்போது மட்டும் பயணச் செலவு பயணப்படியும் கொடுக்கப்படும்.
  • அனைத்துப் பங்குதாரர்களின் கூட்டம் ஆறு மாதத்திற்கொருமுறை நடைபெறும்.
  • பங்குதாரர்கள் கூட்டத்தில் கடந்த ஆறு மாத நிகழ்வுகளைப் பற்றிய விபரம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும், அடுத்த ஆறு மாதத்தில் கூட்டுப் பண்ணையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகளைப் பெற்று கூட்டத்தின் முடிவில் “திட்ட அறிக்கை” தெளிவாக்கப்படும்.
  • பங்குதாரர்கள் கூட்டத்திற்கு பங்குதாரர்கள் வர இயலாவிட்டால் மாற்று நபராக வேறு நபர்களை (குடும்ப உறுப்பினர்களை மட்டும்) அனுப்பலாம். அப்படி வரும் நபர்களுக்கு வேறு அதிகாரம் கிடையாது. அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே உரிமையுண்டு.
  • பங்குதாரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, ஆலோசனைக் குழு நிறைவேற்றும்.
  • வங்கிக் கணக்கு நிர்வாகக் குழுவினரால் நிர்வகிக்கப்படும்.
  • கூட்டுப் பண்ணையின் கணக்குகள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் வியாபார நிறுவனங்களில் பங்குதாரர்கள் கூட்டத்தில் கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும்.
  • பங்குதாரர்கள் அவரவர் பெயரில் இருக்கும் நிலத்தில் குறிப்பிட்ட பயிரை இட வேண்டுமென்றோ, கட்டளைகள் பிறப்பிப்பதோ கூடாது, விவசாயத்தில் குறுக்கீடுகள் செய்யக் கூடாது.
  • கூட்டுப் பண்ணையின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறலாம். பங்குதாரர்கள் கூட்டத்தில் மட்டுமே கூறவேண்டும், அவர்கள் கூறும் ஆலோசனைகளை கண்டிப்பாய் செயல்படுத்தித்தான் ஆக வேண்டும் என்று நிர்பந்தம் செய்யக்கூடாது.
  • “கூட்டுப் பண்ணைத் திட்டம்” எவ்வித வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், பங்குதாரர், கூட்டுப் பண்ணைத்திட்டம் துவக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் விலகிக் கொள்ள முடியாது.
  • கூட்டுப் பண்ணையின் பங்குதாரர்களை தவிர்த்து வேறு யாருக்கும் அவர்களின் பங்கை விற்க முடியாது. ஒரு வேளை விற்க முயன்று, அதனால் பண்ணைக்கோ, மற்ற பங்குதாரர்களுக்கோ எந்த வகையிலாவது நஷ்டம் ஏற்பட்டிருந்தால், விற்பனை செய்ய முயற்சித்த பங்குதாரரே நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். (மேலே குறிப்பிடப்பட்ட இந்த விதிமுறையை நன்கு உணர்ந்த பின்னரே, நான் இந்தக் கூட்டுப் பண்ணையின் பங்குதாரராகச் சேர்ந்துள்ளேன் என்று உறுதி கூறுகின்றேன்).
  • ஒரு வேளை மேலே குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தவிர்க்க முடியாத காரணங்களில், விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பங்குதாரருக்கு அதிகபட்சம் 12% கணக்கிடப்பட்டு பங்குதாரரின் முதலீட்டுத் தொகை வட்டியுடன் திருப்பியளிக்கப்படும்.
  • ஐந்து வருடங்களுக்கு முன்பே விலகும் பங்குதாரர்களுக்கு பங்குதாரரின் அன்றைய நிலத்தின் மதிப்பீட்டின்படியோ, சந்தை நிலவரப்படியோ தொகையைக் கொடுக்க இயலாது.
  • கூட்டுப் பண்ணையிலிருந்து விலகும் பங்குதாரருக்கு, அடுத்து, நிர்வாகத்தில் குறுக்கிட எவ்வித உரிமையும் கிடையாது. எனக்குப் பதிலாக, இன்னாரை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றோ கட்டாயப்படுத்த முடியாது.
  • பங்குதாரர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் வாரிசுகள் பங்குதாரர்களாக (மனைவி, குழந்தைகள்) கருதப்படுவார்கள்.
  • வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவராக இருப்பின் அந்தப் பங்குதாரரின் லாபப் பங்கீடு அவர்களின் வாரிசுகளுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
  • ஒரு வேளை பங்குதாரர் தனது நேரடி வாரிசுகளை தவிர்த்து, தன் மதிப்பிற்குரிய நபருக்கு தனது பங்கை கொடுக்க விரும்பினால் அதை முன்கூட்டியே உயிலாக எழுதி கூட்டுப் பண்ணை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • பங்குதாரர்களின் வாரிசாக யாரை நியமித்து உயில் எழுதிக் கொடுத்திருக்கிறார்களோ அதுவே இறுதியான முடிவாகும். மற்ற வாரிசுகள் இருப்பினும் உரிமையையோ, இலாபப் பங்கையோ கோர முடியாது.
  • ஐந்து வருடங்களுக்குப் பிறகு பங்குதாரரோ, வாரிசுகளோ கூட்டுறவுப் பண்ணையிலிருந்து விலகிக் கொள்ள விருப்பப்பட்டால் எழுத்து மூலம் நிர்வாகிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
  • எழுத்து மூலம் தெரிவித்த பின்பு அடுத்து வரும் பங்குதாரர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும். கூட்டுப் பண்ணையின் யூனிட்டை அன்றைய தேதியில் மதிப்பீடு செய்யப்பட்டு, பங்குதாரரின் விலகல் குறித்து விவாதித்து தீர்மானிக்கப்படும்.
  • பங்குதாரர்கள் கூட்டத்திற்கு பின்பு நிர்வாகக் குழுவின் ஆலோசனையின் படி 180 நாட்களுக்குள் அவருக்குச் சேர வேண்டிய தொகை கொடுக்கப்படும்.
  • பங்குதாரரின் விலகலுக்குப் பிறகு, அவருக்குப் பதிலாக புதிதாக வேறு ஒருவரை சேர்த்துக் கொள்வதா? அல்லது கூட்டுப் பண்ணையில் உள்ள பங்குதாரரே அவரின் பங்கை வாங்கிக் கொள்வதா? என்பதை அன்றைய பங்குதாரர்கள் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும், தீர்மாத்தின் படி நிர்வாகக்குழு செயல்படும்.
  • நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெற்று நபர்களுக்கு பங்குதகள் விற்கப்படும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் பங்கை கேட்டால் அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு கொடுக்கப்படும்.
  • விலகும் பங்குதாரரால், கூட்டுப் பண்ணைக்கோ, கூட்டுப் பண்ணையில் நீடிக்கும் பங்குதாரருக்கோ நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனப் பங்குதாரர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டால், விலகும் பங்குதாரரின் பங்குத் தொகையிலிருந்து நஷ்டப்பட்டவருக்கு பிடித்தம் செய்து கொடுக்கப்படும். பங்குதாரர்களின் தனிப்பட்ட வரவு செலவுகள் இதற்குப் பொருந்தாது.
  • கூட்டுப் பண்ணைத் திட்டத்தை கலைத்து விட வேண்டமென்றோ, சந்தை நிலவரப்படி நிலம் நல்ல விலைக்கு விற்பதால் தற்போது மொத்தமாகப் பண்ணையை விற்று விடலாமென்றோ எந்தப் பங்குதாரரும் நிர்ப்பந்திக்க முடியாது.
  • கூட்டுப் பண்ணை திட்டத்தில் சேர்ந்துள்ள பங்குதாரர்களை இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூற யாருக்கும் உரிமையில்லை. விருப்பப்பட்டால் பங்குதாரர்கள் தாங்களே விலகிக் கொள்ளலாம்.
  • கூட்டுப் பண்ணை நன்முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பண்ணையின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, மற்ற பங்குதாரர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நடந்த கொண்டாலோ, அநதப் பங்குதாரரை மூன்றில் இரண்டு மடங்கு பங்குதாரர்களின் ஒப்புதல் மடலைப் பெற்றுக் கொண்டு கூட்டுப் பண்ணையிலிருந்தும், கூட்டுப் பொறுப்பிலிருந்தும் விலக்கிவிடலாம்.
  • இப்படிச் செய்ய “மற்ற பங்குதாரர்களுக்கு உரிமையுண்டு” என இந்த விதிக்கு ஒப்புக் கொண்டு நான் இந்தக் கூட்டுப் பண்ணையில் பங்குதாரராகச் சேர சம்மதித்து சேர்ந்துள்ளேன்.
  • கூட்டுப் பண்ணையின் முதவீடு நிலம் மட்டுமே, விவசாயத்திற்கு தேவையான பண வசதிகள் வங்கிகளிலிருந்து கடனாகப் பெறப்படும், தேவையெனில் பங்குதாரர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்ப்ட்டு, பங்குதாரர்களிடமிருந்து பெறலாம்.
  • கூட்டுப் பண்ணையின் நிலத்தை உரிமையாளர்கள் அனைவரின் பெயரிலும் உள்ள நிலத்தின் மீது, திட்டத்திலுள்ளபடியும், ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை, பங்குதாரர்கள் விடுதி, வேலையாட்கள் விடுதி போன்ற இதர விஷயங்களுக்காகவும் கடன் பெறப்படும்.
  • கூட்டுப் பண்ணையில் நாம் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளபடி அனைத்து தொலைகளும் செலவிடப்படும்.
  • நடைமுறைச் செலவுகளுக்காக தினசரிக்கூலி, மாதச்சம்பளம், வாகனப் பராமரிப்பு, மின்சாசம், உணவுச் செலவுகள், டீசல், பெட்ரோல் மற்றும் இதர செலவுகளையிம் கணக்கிட்டு, ஆறுமாதச் செலவுத் தொகை வங்கியில் முன் இருப்பாக வைக்கப்படும்.
  • விவசாய விளைபொருட்கள், விற்பனையிலிருந்து வரும் தொகையை வங்கிக் கடனுக்கு முன்பணமாக ஒதுக்கப்படும். பாக்கியுள்ள தொகை நடைமுறைச் செலவுகளுக்காக ஒதுக்கப்படும்.
  • விவசாயம் செய்ய ஆரம்பித்து முதல் மூன்று ஆண்டுகள் கழித்து, பங்குதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுத்து இலாபப் பங்கீடு பிரித்துக் கொடுக்கப்படும்.
  • நிர்வாகக்குழு, கூட்டுப் பண்ணைக்குத் தேவையான நிரந்தரப் பணியாளர்களையும், தற்காலிகப் பணியாளர்கள், தினக்கூலிகள் போன்றவர்களை நியமித்துக் கொள்ளும். தேவையானவர்களுக்கு உணவும், தங்குமிடமும் அவர்களின் பணிக்கேற்ப ஊதியமும் அளிக்கும். ஆண்டுக்கு ஒரு முறை தேவையெனில் பணியாளர்களின் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்படும்.
  • குறிப்பிட்ட சர்வே எண்கிளில் உள்ள அசையா சொத்துக்களும், வாகனங்கள் போன்ற அசையும் சொத்துக்களும், தனிப்பட்ட ஒரு பங்குதாரரின் பெயரில் இருந்தாலும், கூட்டுப் பண்ணையின் தொகையில் செலவு செய்திருப்பாதால் அவை எந்தப் பங்குதாரரின் தனிப்பட்ட சொந்த சொத்தல்ல. கூட்டுப் பண்ணையின் பங்குதாரரின் அனைவருக்கும் உரிமையானவை.
  • கூட்டுப் பண்ணைக்கு குடும்பத்தினரையோ, நண்பர்களையோ, (கூட்டத்தை தவிர்த்து) அழைத்து வரும்போது அவர்களால் ஏற்படும் அனைத்து வகையான செலவுகளும், (உணவு மற்றும் இதர செலவுகள்) அந்தப் பங்குதாரரின் தனிப்பட்ட செலவுகளாக கருதப்படும்.
  • கூட்டுப் பண்ணையின் அருகிலிருக்கும் நிலங்களை தேவையெனில் குத்தகைக்கு எடுத்தும் நிர்வாகக்குழு பயிரிடலாம். பங்குதாரர்கள் யார் பெயரில் குத்தகை ரசீது இருந்தாலும், கூட்டுப் பண்ணையின் சொந்த நிலத்தின்படி உள்ள சட்ட திட்டங்கள் அனைத்தும் குத்தகை நிலத்திற்கும் பொதுவானதே.
  • கூட்டுப் பண்ணையின் சாதனைக்காகவும் விவசாய புரட்சிக்காகவும், வேளாண்மைக்காகவும் கிடைக்கும் பாராட்டுத் தொகைகளும், வட்டித் தள்ளுபடிகளும், தேசிய தோட்டக்கலை, மத்திய அரசு, மாநில அரசு போன்ற அரசு உதவித் தொகைகளும் வங்கிக்கடனை அடைக்கப் பயன்படுத்தப்படும். வேறு பொதுவான கடன்களிருப்பின் அவைகளையும் அடைக்கலாம். கூட்டுப் பண்ணைக்கு கடன்கள் வேறு எதுவும் இல்லையெனில், எந்த வகையில் பண்ணைக்கு வரும் தொகையினாலும் வருமானமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  • ஒருவர் நிலத்தில் சாலைகள் வரலாம், சிலர் இடத்தில் விவசாயமே செய்யாமல் இருக்கலாம், மரப்பயிர் இருக்கலாம்.

 

 

மேலே குறிப்பிடாத சில விதிமுறைகளை சூழ்நிலைக்கேற்ப பங்குதாரர்களை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பிறகு அவைகளும் விதிகளாக்கப்படும். மேலே கூறப்பட்ட அனைத்து விதிகளையும் படித்தும் / படிக்கக் கேட்டும் விதிகளின்படி நடக்க மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு இதில் கையோப்பமிட்டு உள்ளேன்.

/libr /

span style=/li

color: #000000;

br /li style=

 
முதல்பக்கம்
நோக்கம்
நிறுவனர்
கூட்டுப்பண்ணைகள்
தொடர்பு
ஊடகம்
காணொலி
செய்திகள்
புகைப்படங்கள்
கடிதங்கள்
FOLLOW ON US